by admin on | 2025-01-25 09:22 PM
*ஊட்டியில் "நீலகிரி மாவட்ட தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம், நீலகிரி மாவட்ட உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம், நீலகிரி மாவட்ட தலைமை செய்தி அனைத்து பத்திரிகையாளர் சங்கம்" ஆகிய சங்கங்கள் இணைந்து நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்*
ஊட்டியில் கடந்த 18ம் தேதி "நமது எம் ஜி ஆர்" பத்திரிகைச் செய்தியாளர் திரு. செந்தில்குமார் ஊட்டியில் பார்க்கிங் பகுதியில் கட்டண கொள்ளை என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டதற்காக, அந்த பார்க்கிங் ஒப்பந்ததாரர் மற்றும் சில ரவுடிகள் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் அவருடைய நெஞ்சு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அவர் ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
செந்தியாளர் செந்தில் கடுமையாக தாக்கப்பட்டதை கண்டித்து, இன்று ஊட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் "தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம், உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம், தலைமை செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தை நடத்தியது. இந்த ஆர்பாட்டத்தில் செய்தியாளர் தாக்கப்பட்டதை கண்டித்தும், செய்தியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் போடப்பட்டது. தொடர்ந்து இது தொடர்பான மனு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் வழங்கப்பட்டது. இந்த ஆர்பாட்டத்தில் மூத்த பத்திரிகையாளர்கள் A. பாஷா, த
சண்முகம், த
AVM . சரவணன் மற்றும் சகாயராஜா, ஜெரால்டு, மகேந்திரன், ஜாம்பவான் ஜெரால்டு, லாரன்ஸ் மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கங்களின் அனைத்து நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும் என
100 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!