| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் ADMK

அரசியலில் திடீர் திருப்பம்...! அதிமுக வெளியே...! முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளே...!

by Vignesh Perumal on | 2025-04-07 12:20 PM

Share:


அரசியலில் திடீர் திருப்பம்...! அதிமுக வெளியே...! முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளே...!

சட்டப்பேரவையில் பதாகைகளை காட்டி அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதிமுக உறுப்பினர்கள் சிலர் பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. அவைத் தலைவர் மு. அப்பாவு அவர்களை அமைதியாக இருக்குமாறு பலமுறை எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை.

இதையடுத்து, அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததற்காக அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து அவைத் தலைவர் உத்தரவிட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட உறுப்பினர்கள் இன்றைய அவை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது. இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே நிலவும் மோதல் போக்கு இதன் மூலம் மேலும் அதிகரித்துள்ளது. எதிர்க்கட்சிகள் அவ்வப்போது பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து அவையில் அமளியில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், பதாகைகளை ஏந்தி கோஷமிட்டது அவை மரபை மீறிய செயல் என்று ஆளுங்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிமுக உறுப்பினர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது ஜனநாயக விரோதமானது என்றும், மக்களின் பிரச்சனைகளை அவையில் எழுப்ப எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உண்டு என்றும் அவர்கள் கூறுகின்றனர். நாளை அவை மீண்டும் கூடும்போது இந்த விவகாரம் மேலும் விவாதத்திற்கு உள்ளாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்நிலையில், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் வெளிநடப்பு செய்த நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் உரையாற்றி உள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் மிகவும் பேசுபொருளாக திகழ்கின்றது. மேலும், அதிமுகவினர் வெளியேற்றப்பட்ட நிலையில் செங்கோட்டையன் வெளியேற்றப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment