by admin on | 2025-01-25 02:41 PM
ஆத்தூர் அருகே நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், முக்காணி பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட ஆத்தூர் முக்காணி பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் நாராயணன் (37), என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று ஆத்தூர் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.