| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

மீனவர்கள் நலன்...! யாரெல்லாம் பயன்பெற முடியும்...! முதலமைச்சர் அதிரடி பேச்சு...!

by Vignesh Perumal on | 2025-04-07 11:52 AM

Share:


மீனவர்கள் நலன்...! யாரெல்லாம் பயன்பெற முடியும்...! முதலமைச்சர் அதிரடி பேச்சு...!

இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டு உரை நிகழ்த்தினார். அதாவது,"இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு அரசு சில முன்னெடுப்பகளை எடுத்துள்ளது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் கூறியுள்ளார். 

மேலும், இது தொடர்பாக அவர் கூறியதாவது: "தங்கச்சி மடம் பகுகுதியில் ரூ. 150 கோடியில் மீன் பிடி துறைமுகம். 7,000 பேருக்கு கடல் பாசி வளர்ப்பு உள்ளிட்ட பயிற்சி அளிக்க  சிறப்பு திட்டம். 15,300 மீனவர்களுக்கு மீன் மற்றும் மீன் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்ய பயிற்சி வழங்குதல். காளான் வளர்ப்பு, சுற்றுலா படகு இயக்குதலுக்காக 14,000 பயனாளிகளுக்கு ரூ. 53 கோடியில் பயிற்சி வழங்கப்படும். இந்த திட்டங்களை கண்காணிக்க, ஒருங்கிணைக்க திட்ட கண்காணிப்பு பிரிவு உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்படும்".

அதைத்தொடர்ந்து, "கட்சத்தீவை மீட்க வேண்டும், இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்க வேண்டும் என இலங்கை செல்லும் பிரதமர் மோடிக்கு, இது குறித்து அந்நாட்டு அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மான நிறைவேற்றி இருந்தோம். ஆனால் இது குறித்து அவர் பேசியதாக பெரிதளவில் செய்தி இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment