by Vignesh Perumal on | 2025-04-07 11:34 AM
சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் அணிந்திருந்த பேட்ஜில் "அந்த தியாகி யார்?" என்று எழுதப்பட்டிருந்தது.
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் சுமார் 1000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த ஊழல் தொடர்பாக திமுக அரசை விமர்சிக்கும் வகையிலும், இந்த ஊழலுக்கு காரணமான "அந்த தியாகி யார்?" என்று கேள்வி எழுப்பும் வகையிலும் அதிமுக எம்எல்ஏக்கள் இந்த பேட்ஜை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர்.
முன்னதாக, டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.