| | | | | | | | | | | | | | | | | | |
தேசிய செய்திகள் india

ஜனாதிபதி அரசு முறை பயணம்...! எங்கு செல்கிறார் தெரியுமா...?

by Vignesh Perumal on | 2025-04-07 09:52 AM

Share:


ஜனாதிபதி அரசு முறை பயணம்...! எங்கு செல்கிறார் தெரியுமா...?

ஜனாதிபதி திரௌபதி முர்மு அரசுமுறை பயணமாக போர்ச்சுகல் மற்றும் சுலோவாகியாவுக்கு செல்கிறார். ஏப்ரல் 7 முதல் 8 வரை அவர் போர்ச்சுகலில் இருப்பார். போர்ச்சுகல் அதிபர் மார்செலோ ரெபெலோ டி சவுசாவின் அழைப்பின் பேரில் அவர் அங்கு செல்கிறார். இந்திய ஜனாதிபதி ஒருவர் போர்ச்சுகலுக்கு 27 ஆண்டுகளுக்குப் பிறகு செல்வது இதுவே முதல் முறையாகும். 

ஏப்ரல் 9 முதல் 10 வரை அவர் சுலோவாகியாவில் இருப்பார். சுலோவாகிய அதிபர் பீட்டர் பெல்லேகிரினியின் அழைப்பின் பேரில் அவர் அங்கு செல்கிறார். இந்திய ஜனாதிபதி ஒருவர் சுலோவாகியாவுக்கு 29 ஆண்டுகளுக்குப் பிறகு செல்வது இதுவே முதல் முறையாகும். சுலோவாகியாவின் நிட்ராவில் உள்ள ஜாகுவார் லேண்ட் ரோவர் ஆலைக்கு செல்ல உள்ளார்.

இந்த பயணங்களின்போது, இரு நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஜனாதிபதி முர்மு பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இரு நாடுகளின் தலைவர்களையும் அவர் சந்தித்துப் பேசுவார்.

தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment