| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Chennai

மக்களே உஷார்....! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...!

by Vignesh Perumal on | 2025-04-07 09:39 AM

Share:


மக்களே உஷார்....! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...!

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 12ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மீனவர்கள் வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்லும்போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.  அதுமட்டுமின்றி, பொதுமக்கள் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


தற்போதைய நிலவரப்படி, சென்னையில் வெயில் மற்றும் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. இன்று அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகலாம். மேலும் தகவல்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பார்க்கவும்: https://mausam.imd.gov.in/chennai/ 

தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment