| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Chennai

10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..!!!

by Muthukamatchi on | 2025-04-07 09:04 AM

Share:


10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..!!!

சென்னையில் இன்று (ஏப்ரல் 7, 2025) அமலாக்கத் துறையினர் 10 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனைகள், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும், இந்த சோதனைகள் சென்னை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களிலும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சோதனைகள் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் தொடர்பானதாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. குறிப்பாக அடையாறு, தேனாம்பேட்டை, சிஐடி காலனி, எம்.ஆர்.சி.நகர் உள்ளிட்ட இடங்களில் ரெய்டு அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் தொடர்புடைய இடங்களில் சோதனை என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், TVH கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment