by Vignesh Perumal on | 2025-04-07 08:42 AM
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே 5 மாத ஆண் குழந்தை வீட்டின் பின்புறம் இருந்த தண்ணீர் பேரலில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தையின் தாயிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அந்த விசாரணையில், தன்னை விட 10 வயது அதிகமான கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, நாக்பூரில் வசிக்கும் கணவரை பிரிந்து, கடந்த 3 மாதங்களாக கீரனூர் புலியூரில் தாயாரின் வீட்டில் அந்த பெண் வசித்து வருகிறார்.
இந்நிலையில், வீட்டில் உள்ள அனைவரும் உறங்கிய கொண்டிருந்த நிலையில், நள்ளிரவில் வீடு புகுந்து தாலிச் செயினை பறித்துச்சென்ற சிலர், குழந்தையை தூக்கிச் சென்றதாக, அந்த பெண் அளித்த வாக்குமூலத்தில் சந்தேகம் இருப்பதால், காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!