by Muthukamatchi on | 2025-04-06 09:59 PM
திண்டுக்கல் அருகே வாலிபர் வெட்டி படுகொலை செய்த வழக்கில் 6 இளைஞர்கள் கைது.திண்டுக்கல் பெரியகோட்டை அருகே உள்ள பாறைப்பட்டியை சேர்ந்த முனியப்பன் மகன் நாகராஜ்(27) என்பவர் நேற்று குளிப்பட்டி அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார்இதுகுறித்து மாவட்ட எஸ்பி.பிரதீப் உத்தரவின் பேரில்டிஎஸ்பி.சிபிசாய் சௌந்தர்யன் தலைமையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர்கள் அங்கமுத்து பாலசுப்பிரமணியன், கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக மகேந்திரன், மாதவன், விக்னேஸ்வரன், கிரி, சுகுமார், விஜய் ஆகிய 6 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட தகராறால் கொலை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல் -
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!