by Vignesh Perumal on | 2025-04-06 08:29 PM
பத்திரிகையாளர் மன்றத்திற்கு நிதி ஒதுக்கீடு தொடர்பான தகவல்களை துணை முதலமைச்சர் உதயநிதி அவர்கள் இன்று (ஏப்ரல் 6, 2025) அறிவித்தார். சென்னை பத்திரிகையாளர் மன்ற உட்கட்டமைப்பு வசதிக்காக தமிழக அரசு ₹2.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக பத்திரிகையாளர் நல நிதிக்காக வழங்கப்பட்டு வந்த ₹5 லட்சம் உதவித்தொகை ₹10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு ₹2 கோடியே 40 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பத்திரிகையாளர்களுக்கு இலவச பேருந்து பயணம் மற்றும் செய்தியாளர் அங்கீகார அட்டை போன்ற பல நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் தகவல்கள் மூலம், பத்திரிகையாளர் மன்றம் மற்றும் பத்திரிகையாளர் நலனுக்காக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருவது தெரிய வருகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!