by Vignesh Perumal on | 2025-04-06 01:29 PM
பிரதமர் மோடி தமிழகம் வருவதை எதிர்த்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.