by Vignesh Perumal on | 2025-04-06 09:02 AM
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 50 வயதான பெண்மணியின் நுரையீரலில் சிக்கியிருந்த சப்போட்டா விதையை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
சிகிச்சையின் போது அதீத திறன் கொண்ட நவீன கருவிகள் மூலம் தொண்டையில் நுண்துளையிட்டு, அதன் வழியாக நுரையீரல் அடியில் சிக்கியிருந்த சப்போட்டா விதையை அகற்றினர்.
மேலும், மருத்துவர் சுரேஷ், தலைமை மயக்கவியல் மருத்துவர்கள் சீனிவாசன், அறிவரசன் ஆகியோர் அடங்கிய குழு இணைந்து இந்த சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். அரசு மருத்துவமனை டீன் முத்து சித்திரா மருத்துவ கண்காணிப்பாளர் அருண்ராஜ் கூறுகையில், இந்த சிகிச்சையை ஒரு பெரிய மருத்துவக் குழு இணைந்து வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!