by Vignesh Perumal on | 2025-04-05 07:54 PM
அரசாங்க இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மண்டபத்தில் நாளை மருத்துவ முகாமில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பதாக விளம்பரம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள மண்டபத்தையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதையும் முழுமையாக மீட்டெடுக்க வேண்டும். இது தொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 'திருப்பூர் வடக்கு வட்டத்திலுள்ள நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்தை, ஆக்கிரமித்து கொங்கு கலையரங்கம் என்ற திருமண மண்டபம் கட்டியுள்ளது தொடர்பாக தொடர்ச்சியாக புகார் அளித்த நிலையில் வருவாய்த்துறையினர் க.ச.எண்: 566 ல் உள்ள நிலங்கள் அரசு ஆவணங்களின்படி அளவீடு செய்ததில், ஓடை புறம்போக்கு நிலத்தில் மண்டபமும் அமைந்துள்ளதை உறுதிசெய்து ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் வழங்கினர் ஆனால் இந்த மண்டபத்தில் நாளை 6ம் தேதி மருத்துவ முகாம் நடத்துவதாகவும் அதில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிகள் கலந்து கொள்வதாக விளம்பரம் செய்து வருகின்றதால் உடனடியாக இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள மண்டபத்தையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதையும் முழுமையாக மீட்டெடுக்க வேண்டும்.
திருப்பூர் வடக்கு வட்டத்திலுள்ள நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கொங்கு கலையரங்கம் என்ற திருமண மண்டபம் கட்டியுள்ளது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் எங்களுடைய சங்கம் சார்பாக அளித்த புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு வட்டத்திலுள்ள வருவாய்துறை அலுவலர்கள் ஆய்வு நடத்தினர்.
அதில் நெருப்பெரிச்சல் கிராமம், க.ச.எண்: 566 ல் உள்ள நிலங்கள் அரசு ஆவணங்களின்படி அளவீடு செய்து, ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஓடை புறம்போக்கு நிலத்தில் தனியார் கொங்கு கலையரங்கம் என்ற மண்டபமும் அமைந்துள்ளன எனவும் இது தொடர்பாக ஆக்கிரமிக்கப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அகற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக தொடர்ச்சியாக தினசரி நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த நிலையில் நாளை 06-04-2025 ம் தேதி மேற்படி அரசாங்க இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கொங்கு திருமண மண்டபத்தில் மருத்துவ முகாம் நடத்துவதாகவும் அதில் மதிப்புக்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களும், மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொள்வதாகவும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள இடங்களில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளது மக்கள் மத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே உடனடியாக இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய தீர்வுகண்டு மேற்படி அரசாங்க இடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக அப்புறப்படுத்த போர்க்கால அடிப்படையில் விரைவாக தீர்வுகாண வேண்டுமென' அதில் கூறப்பட்டுள்ளது.
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!