by Satheesh on | 2025-04-05 02:48 PM
சென்னை மண்டல உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் பணியிட மாற்றம். தர்பூசணியில் நிறம் ஏற்றி கலப்படம் செய்கின்றனர் என்று வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய இவர், கெட்டுப்போன உணவு விற்பனைக்காக பிலால் பிரியாணி கடைக்கு பூட்டு போட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நேற்று முன்தினம் பிலால் ஓட்டலுக்கு சோதனைக்கு சென்ற போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பதும், தர்பூசணி பழங்களை பொதுமக்கள் தாராளமாக வாங்கி சாப்பிடலாம் என்றும் குளிர்பான கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக தான் துணை போகவில்லை என்றும் பேட்டி அளித்திருந்தார். பிலால் உணவகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்டோருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவரது பணியிட மாற்றம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!