by Vignesh Perumal on | 2025-04-05 10:58 AM
புத்தகம் கட்டுநர் பயிற்சியை நிறைவு செய்த, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசு வேலை வழங்குதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தலைமை அலுவலகம் முன், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், கடந்த 17ம் தேதி முதல், 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: "பல ஆண்டுகளாக பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித் பராமரிப்பு தொகையை (DAB) ரூ.1500 இல் இருந்து ரு.5000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். உள்ளிட்ட பல நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பல ஆண்டுகளாக பல போராடி வருகிறோம். எங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
எனவே மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்திற்கு எங்கள் நியாயமான கோரிக்கைகளை கொண்டு சென்று நிறைவேற்ற வலியுறுத்தி எதிர்வரும் 15/04/2025 அன்று கவனயீர்ப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த செய்தியினை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பார்வையற்ற சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தமாறு அனைத்து ஊடக நண்பர்களையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!