by Vignesh Perumal on | 2025-04-05 09:38 AM
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் தனியார் பனியன் நிறுவனம் ஒன்று இயங்கிக் கொண்டுள்ளது. இன்று அதிகாலை திடீரென பனியன் நிறுவனத்தின் குடோனுக்குள் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து துரிதமாக செயல்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டார்கள். இந்த தீ விபத்து குறித்த விசாரணையில் தங்கவேல் என்ற நபருக்கு சொந்தமான அந்த தொழிற்சாலையில் பனியன் மற்றும் பனியன்களை பேக்கிங் செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகள் அங்கு நடைபெற்று வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பொழிந்தது குறிப்பிடத்தக்கது. பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. இச்சூழலில் இன்று அதிகாலை யாரும் எதிர்பாராத சூழலில் திடீரென மின் விநியோகம் சீர்படுத்தப்பட்ட நிலையில், மின்கசிவால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பனியன் கம்பெனியின் காவலாளி கொடுத்த தகவலின் அடிப்படையில் தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!