by Vignesh Perumal on | 2025-04-05 09:19 AM
இந்திய மைய வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பத்துடன் புதிய ரூ.10 மற்றும் ரூ.500 நோட்டுகளை வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'விரைவில் மகாத்மா காந்தி (புதிய) சீரிஸில் ரூ.10 மற்றும் ரூ.500 மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் விரைவில் அச்சடித்து வெளியிடப்பட உள்ளது. இந்த ரூபாய் நோட்டுக்களில் மையம் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரவின் கையொப்பம் இருக்கும்.
இந்த ரூபாய் நோட்டுக்களின் வடிவமைப்பு அனைத்து வகையிலும் மகாத்மா காந்தி (புதிய) சீரிஸில் உள்ள ரூ.10 மற்றும் ரூ.500 நோட்டுக்களை போலவே இருக்கும். கடந்த காலத்தில் மைய வங்கி வெளியிட்ட அனைத்து ரூ.10 மற்றும் ரூ.500 நோட்டுக்களும் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்றும் அதில் தகவல் தரப்பட்டுள்ளது.
இந்திய மைய வங்கி முதல் முறையாக கடந்த மாதம் மைய வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பத்துடன் ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியது. தற்போது இரண்டாவது முறையாக, ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பத்துடன் மகாத்மா காந்தி (புதிய) சீரிஸில் ரூ.10 மற்றும் ரூ.500 மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களை விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!