by Vignesh Perumal on | 2025-04-05 08:19 AM
ஈரோடு இரயில் நிலையம் வழியாக வந்த இரு வேறு ரயில்களில் பெண்களிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நபரை கைது செய்து அவரிடம் இருந்த 8.5 சவரன் நகையை மீட்டனர். இந்த நகை திருட்டில் ஈடுபட்ட நகை கொள்ளையர்களை சுமார் 100 கண்காணிப்பு கேமராவில் கண்காணித்து மூன்றே நாளில் குற்றவாளியை கைது செய்த ஈரோடு ரயில்வே காவல்துறை ஆய்வாளர் பிரியா சாய் ஸ்ரீ க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.