by yogabalajee on | 2025-01-21 01:08 PM
லக்னோ அணிக்கு புதிய கேப்டனாக ரிஷாப் பன்ட் 27, நியமிக்கப்பட்டார்.
ரிஷாப் பன்ட் கூறுகையில், ''லக்னோ அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி. அணியின் வெற்றிக்கு 200 சதவீதம் பங்களிப்பேன். அணியில் திறமையான இளம் வீரர்களுடன், அனுபவ வீரர்கள் இருப்பது பலம். அணியை சிறப்பாக வழிநடத்துவது குறித்து நிறைய கேப்டன், சீனியர் வீரர்களிடம் இருந்து கற்றுக்கொண்டுள்ளேன். ஒரு வீரரை எப்படி கவனித்துக் கொள்வது என்பதை ரோகித் சர்மாவிடம் இருந்து தெரிந்து கொண்டேன். சகவீரர்களுடன் இணைந்து முதன்முறையாக கோப்பை வென்று தர முயற்சிப்பேன்,'' என்றார்.