by satheesh on | 2026-04-20 05:49 PM
கயத்தாறு அருகே மண்ணுக்குள் பதுக்கி விற்பனைக்காக வைத்திருந்த 221 மது பாட்டில்கள் பறிமுதல் - விற்பனையில் ஈடுபட்ட தாய் மகன் கைது :
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள செட்டிகுறிச்சி பகுதியில் கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக கயத்தாறு காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது தகவலின் அடிப்படையில் கயத்தாறு போலீசார் சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது செட்டிகுறிச்சி முத்துகிருஷ்ணன் காலனியை சேர்ந்த சுடலைமணி மனைவி முத்துலட்சுமி (35) மகன் இசக்கிபாண்டி (19) ஆகிய இருவரும் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருக்கும் பொழுது காவல்துறையினர் இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர் . மேலும் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி தொடர்ந்து மூன்று நாட்கள் ஒயின்ஷாப் மூடப்படும் என அறிவித்த நிலையில் விற்பனைக்காக மது பாட்டில்களை வாங்கி வீட்டின் அருகே மண்ணுக்குள் புதைத்து வைத்திருப்பது முதல்கட்ட விசாரணை தெரிய வந்துள்ளது . மேலும் முத்துலட்சுமி மற்றும் மகன் இசக்கிபாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தது மட்டுமின்றி விற்பனைக்காக வைத்திருந்த 180ml கொண்ட 221 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து கயத்தாறு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். தாய் மகன் இருவரும் சேர்ந்து மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வருகின்ற. 21,22,23 ஆகிய தேதிகளில் மது விற்பனைக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தடை செய்யப்பட்ட நாட்களில் மீறி யாராவது கள்ள மது விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
தேனி கலெக்டர் வைத்தியநாதன் ஆய்வு....!!!!!
, பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்....
கள்ளக்காதல் - பெண் எரித்துக் கொலை ! தந்தை மகன் கைது !!
பஸ்ஸில் மனைவி மகளுக்கு சரமாரி அரிவாள் வெட்டு ! கணவர் கைது !!
'எய்ம் ஃபார் சேவா'வின் 'தயானந்த கிருபா கேர்' பராமரிப்பு நிதி திரட்ட, சென்னையில் 'ராதா - பக்தியின் உருவகம்' பரதநாட்டிய நிகழ்ச்சி