by satheesh on | 2026-04-11 02:04 PM
குமரிமாவட்டத்தில் லாரி விபத்தில் மாணவி மரணம்: தமிழ்நாட்டில் முதல் முறையாக டிரைவருக்கு மரணம் ஏற்படுத்திய வழக்கு, சிறையில் அடைப்பு. எஸ்.பி. டாக்டர் ஸ்டாலின் கடும் நடவடிக்கை.!
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலைய எல்லையில் டாரஸ் லாரி விபத்தில் மரணம் ஏற்பட்ட வழக்கில், தமிழ்நாட்டில் முதல்முறையாக டிரைவர் மீது குற்றமுறு மரணம் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் (30) என்ற லாரி டிரைவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். கனிமவள லாரி மூலம் விபத்து ஏற்படுத்தினாலோ அல்லது குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டாலோ, கடுமையான சட்ட பிரிவான 105 பி.என்.எஸ் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதனால் வருங்காலங்களில் வாகன ஓட்டிகள் மிக எச்சரிக்கையுடன், கவனத்துடன் வாகனத்தை இயக்க முன் வருவார்கள் என நம்புவோம்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
விண்ணப்பம் பெற விடிய விடிய காத்திருக்கும் பெற்றோர்கள்...! அலட்சியம் நீடிக்குமா...?
மாணவி பலி - மரண வழக்கு ! தமிழ்நாட்டில் முதல் முறை - எஸ்பி அதிரடி !!
கேள்வி கேட்ட மக்கள் மீது தாக்குதல்...! அதிமுக வேட்பாளர் பிரச்சாரத்தில் வன்முறை...!
தகராறு...! தம்பி மனைவி கொலை...! விவசாயி அதிரடி கைது...!
பானை சின்னத்திற்குத் தீவிர வாக்கு சேகரிப்பு...! வேகமெடுக்கும் பிரச்சாரம்...!