| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் அரசியல்

திமுக-வை வீட்டுக்கு...! சசிகலா ஆவேசப் பேச்சு...! ரசிகர்கள் மகிழ்ச்சி...!

by Vignesh Perumal on | 2026-04-09 02:23 PM

Share:


திமுக-வை வீட்டுக்கு...! சசிகலா ஆவேசப் பேச்சு...! ரசிகர்கள் மகிழ்ச்சி...!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவரும் பொதுச்செயலாளருமான வி.கே. சசிகலா அவர்கள் பேசிய பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. 

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகே, தனது கட்சி வேட்பாளர் சமயநல்லூர் டாக்டர் பாலமுருகனை (தென்னை மரச் சின்னம்) ஆதரித்து சசிகலா இன்று (ஏப்ரல் 8, 2026) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

"எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் முதல்வராக இருந்தபோது ஆடு, மாடு, மடிக்கணினி, சீருடை என ஏழை மக்களுக்காக ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்தார்கள். அதற்காக அவர்கள் கடன் வாங்கவில்லை. ஆனால், திமுக இன்று உருப்படியாக எதுவும் செய்யாமல் 12 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி வைத்துள்ளது. இது ஒவ்வொரு வாக்காளரின் தலையிலும் விழும் கடனாகும்."

2021 தேர்தல் அறிக்கையில் கூறிய எதையும் திமுக நிறைவேற்றவில்லை என அவர் சாடினார். நெல்லுக்கு குவிண்டாலுக்கு ₹2,500 தருவதாகக் கூறி வழங்கவில்லை. மின் மோட்டார்களுக்கு மானியம் மற்றும் கூட்டுறவு மானியம் வழங்கப்படவில்லை.


மாவட்டந்தோறும் மேம்பாலங்கள் மற்றும் நீர்நிலைச் சீரமைப்புப் பணிகள் வெறும் அறிவிப்போடு நின்றுவிட்டன.

"மக்களுக்குச் சலுகைகள் தராமல் சொத்து வரி மற்றும் வீட்டு வரியை மட்டும் உயர்த்திவிட்டார்கள். இன்று குடிநீரில் கழிவுநீர் கலக்கிறது, அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இல்லை. மாதம் ₹1,000 உரிமைத் தொகை கொடுத்தவர்கள், இப்போது ₹2,000 தருவதாகக் கூறுவது எப்படிச் சாத்தியம்?" என்று கேள்வி எழுப்பினார்.

"நான் எந்த அரசியல் தலைவர்களையும் நம்பவில்லை, தமிழ்நாட்டு மக்களை மட்டுமே நம்பித் தேர்தலில் களம் காண்கிறேன். ஜெயலலிதா அவர்களுடன் இருந்தபோது எப்போதும் மக்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றித்தான் நாங்கள் இருவரும் சிந்திப்போம். அந்த லட்சியத்தோடுதான் இந்த இயக்கம் செயல்படும்," என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் கொடுக்கும் பணத்தைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், "யார் எதைக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள், அது அவர்கள் பணம் இல்லை (மக்களின் வரிப்பணம்). ஆனால், வாக்கு என்று வரும்போது தகுதியான வேட்பாளருக்குத் தென்னை மரச் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்," என வேண்டுகோள் விடுத்தார்.


சோழவந்தான் தொகுதியில் அதிமுக, திமுக எனப் பெரும் கட்சிகள் மோதினாலும், சசிகலாவின் இந்தப் பிரச்சாரம் மற்றும் அவரது கட்சியின் 'தென்னை மரச் சின்னம்' வாக்குகளைப் பிரிக்குமா அல்லது அவருக்குச் செல்வாக்கைத் தருமா என்பது விவாதமாகியுள்ளது. குறிப்பாக, ஜெயலலிதாவின் பெயரையும், நலத்திட்டங்களையும் முன்வைத்து அவர் வாக்கு சேகரிப்பது குறிப்பிடத்தக்கது.








நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment