by admin on | 2025-01-20 01:56 PM
திண்டுக்கல் நீதிமன்றத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வைகோ கூறியதாவது,
மோடி ஆட்சியில் சர்வாதிகாரம் மட்டுமே ஓங்கி வருகிறது. அரசியல் அமைப்பு சட்டத்தை அவர்கள் மதிப்பதே இல்லை. ஒரேநாடு, ஒரேதேர்தல், ஒரேகொடி என மாற்ற முயற்சி முயற்சி எடுத்து வருகின்றனர்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜயும் அவர்களை சந்தித்து பேசுகிறார். இது அவரின் தனிப்பட்ட உரிமை. இவ்வாறு அவர் கூறினார்.