by satheesh on | 2026-01-20 03:37 PM
பாஜக தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள திரு. நிதின் நபின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்-அண்ணாமலை ; உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. நிதின் நபின் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஒரு சாதாரண அடிமட்டத் தொண்டராகத் (கார்யகர்த்தா) தனது பயணத்தைத் தொடங்கி, இன்று இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் பொறுப்பை அவர் எட்டியிருப்பது, நமது கட்சியின் உண்மையான உணர்வைப் பிரதிபலிக்கிறது. கடின உழைப்பு, தளராத உறுதி மற்றும் அமைப்பின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவை பாரதிய ஜனதா கட்சியில் எப்போதும் அங்கீகரிக்கப்பட்டு வெகுமதி அளிக்கப்படும் என்பதற்கு இதுவே சான்று. நமது கட்சியின் மகத்தான வரலாற்றில், மிக இளைய வயதில் தேசியத் தலைவரானவர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். தகுதியின் அடிப்படையில் மட்டுமே முன்னேற்றம் என்பதை இது நிரூபிப்பதோடு, அடிமட்டத்திலிருந்து வரும் திறமைகளை உண்மையாக வளர்க்கும் ஒரே கட்சி பாஜகதான் என்பதையும் உலகுக்கு பறைசாற்றுகிறது. இளைஞர் அணிப் பிரச்சாரங்கள் முதல் முக்கியமானப் பொறுப்புகள் வரை திரு. நிதின் நபின் அவர்களின் வளர்ச்சி, நமது இயக்கத்தை வரையறுக்கும் சித்தாந்த ஈடுபாட்டையும் களப்பணியையும் பிரதிபலிக்கிறது. தலைவர்கள் அமைப்புக்கும் மக்களுக்கும் செய்யும் சேவையின் மூலமே உருவாக்கப்படுகிறார்கள் என்பதை பாஜக எப்போதும் நம்புகிறது. இவரது தேர்வு இந்தக் கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்துவதோடு, நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தொண்டர்களுக்கு ஒரு வலிமையான செய்தியை வழங்குகிறது. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தொடர்ச்சியான வழிகாட்டுதலின் கீழும், திரு. நிதின் நபின் அவர்களின் திறமையான தலைமையின் கீழும், நமது கட்சித் தொண்டர்கள் புத்துயிர் பெற்று, கட்சியின் வளர்ச்சிக்காகவும், நமது பாரத தேசத்தின் முன்னேற்றத்திற்காகவும் பெருமிதத்துடன் உழைக்கத் தயாராக உள்ளனர் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். முன்னாள் தேசியத் தலைவரும், மாண்புமிகு மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான திரு. ஜே.பி. நட்டா அவர்களின் அளப்பரிய பங்களிப்பையும், சிறந்த உழைப்பையும் நாங்கள் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவு கூர்கிறோம். கட்சியின் இக்கட்டான காலக்கட்டங்களில் முன்னின்று வழிநடத்திய அவரது தலைமை, நமது அமைப்புக் கட்டமைப்பை வலுப்படுத்தியதோடு, தேச முன்னேற்றத்திற்கான நமது அர்ப்பணிப்பை உறுதி செய்தது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில், பெரும் பொறுப்பை ஏற்கும் திரு. நிதின் நபின் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் - அண்ணாமலை.
இணை ஆசிரியர் ; N.சதீஷ்குமார். பெரியகுளம். தேனி.
பயங்கர ஆயுதங்களுடன் இருவர் கைது.....!!!!!
போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க முயற்சி,...??? வாலிபர் தற்கொலை முயற்சி....!!!!
மிரட்டும் தனியார் நிதி நிறுவனம்,....??? தற்கொலை முயற்சி....!!"
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் மறியல் போராட்டம்.....!!!!
தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முறைகேடு தேனியில் ஆர்ப்பாட்டம்....!!!