| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் Naam Tamilar Katchi

வாழ்வாதாரத்தைப் பலிகொடுக்காதே..! இந்த திட்டத்தைக் கைவிட சீமான் வலியுறுத்தல்..!

by Vignesh Perumal on | 2026-01-18 02:42 PM

Share:


வாழ்வாதாரத்தைப் பலிகொடுக்காதே..! இந்த திட்டத்தைக் கைவிட சீமான் வலியுறுத்தல்..!

சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகக் கோவளம் முட்டுக்காடு உப்பங்கழி பகுதியில் நன்னீர்த் தேக்கம் அமைக்கும் பணிகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்கு ஆரம்பத்திலிருந்தே அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது சீமான் அவர்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கோவளம் பகுதியில் நன்னீர்த் தேக்கம் அமைப்பதன் மூலம், அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள 16 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் எனச் சீமான் சுட்டிக்காட்டியுள்ளார். கடலும் ஆறும் இணையும் இந்த உப்பங்கழிப் பகுதி மீன்களின் இனப்பெருக்கத்திற்கு மிக முக்கியமானது. இதனை நன்னீர்த் தேக்கமாக மாற்றினால், கடல்சார் சூழலியல் முற்றிலும் பாதிக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

புதிய நீர்த்தேக்கங்கள் அமைப்பதை விட, இருக்கும் நீர்நிலைகளைப் பாதுகாப்பதே சிறந்தது எனச் சீமான் ஆலோசனை வழங்கியுள்ளார். 

"ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் கழிவுநீர் கலப்பதையும், குப்பைகள் கொட்டப்படுவதையும் தடுத்தாலே போதும். அவற்றை முறையாகத் தூர்வாரிப் பராமரித்தாலே சென்னையின் குடிநீர் தேவையைத் தாராளமாகப் பூர்த்தி செய்ய முடியும். அதை விடுத்து, இயற்கையான உப்பங்கழிகளைச் சிதைப்பது முறையல்ல."

விஞ்ஞான ரீதியாக இத்திட்டம் தவறானது எனக் குறிப்பிட்டுள்ள அவர், கடலோரப் பகுதிகளில் நன்னீர்த் தேக்கம் அமைப்பது நிலத்தடி நீர் மட்டத்தில் உவர்ப்புத் தன்மை அதிகரிக்கவே வழிவகுக்கும் எனக் கூறியுள்ளார்.

கோவளம் நன்னீர்த் தேக்கத் திட்டத்தை எவ்விதத் தாமதமும் இன்றி தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் அந்த மண்ணின் மக்களின் விருப்பத்திற்கு மாறாக எவ்விதப் பணிகளையும் திணிக்கக் கூடாது.

மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்திட்டத்தை அரசு தொடர்ந்து முன்னெடுத்தால், மக்களைத் திரட்டி நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும் எனச் சீமான் எச்சரித்துள்ளார்.

சென்னையின் குடிநீர் ஆதாரத்தைப் பெருக்க, மழைக்காலங்களில் கடலில் வீணாகக் கலக்கும் நீரைச் சேமிக்கக் கோவளம் அருகே ஒரு தடுப்பணை அமைத்து நன்னீர்த் தேக்கத்தை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், இது உப்பங்கழி மீன்பிடித் தொழிலை அழித்துவிடும் என்பது மீனவர்களின் நீண்டகால அச்சமாக உள்ளது.











நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment