by admin on | 2026-01-17 01:09 PM
வத்தலகுண்டுவில் டாஸ்மாக் பார் அருகே ரத்த காயங்களுடன் 35 வயது வாலிபர் மர்ம மரணம் - கொலையா...???
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் பாமா மருத்துவமனை எதிரே உசிலம்பட்டி சாலையில் டாஸ்மாக் பார் அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் மற்றும் முகத்தில் ரத்த காயங்கள் உடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் மேலும் வாலிபர் மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் இரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபரின் உடலை வத்தலகுண்டு போலீசார் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வத்தலகுண்டு போலீசார் இறந்த வாலிபர் யார்? கொலை செய்யப்பட்டாரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானலில் 2-வது நாளாக தொடரும் அவலம்...! விலங்குகள் ஊருக்குள் தஞ்சம்...!
சிறுமி உயிரிழந்த விவகாரம் - இருவர் மீது வழக்குப்பதிவு ! முடிவுக்கு வந்த போராட்டம் !!
கே என் நேரு மீதான முறைகேடு வழக்கு ! நீதிமன்றம் சரமாரி கேள்வி !!
விளாத்திகுளம் சம்பவம் - எஸ் வி சேகர் சர்ச்சை பேச்சு !
ஓசி சிகரெட் - மறுத்த கடைக்காரரை அறிவாளால் வெட்டிய பயங்கரம் ! போதை கும்பல் அட்டகாசம் !!