by admin on | 2026-01-14 04:38 PM
தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்களின் முன்னிலையில் ஆயுதப்படை காவலர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். காவல் கண்காணிப்பாளர் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உறியடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேலும் ஆயுதப்படை காவலர்கள் பங்கேற்ற கோலப்போட்டியில் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு, போதைக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, கடலூர் மாவட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்த கோலங்கள் போட்டியில் இடம் பெற்றிருந்தன. மேலும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. N. கோடீஸ்வரன் திரு. V. ரகுபதி, துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு. S. தமிழ் இனியன் திருமதி. A. மனிஷா, திரு. P. அப்பாண்ட ராஜ், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. சுரேஷ்பாபு மற்றும் காவல்துறையினர் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
கொடைக்கானலில் 2-வது நாளாக தொடரும் அவலம்...! விலங்குகள் ஊருக்குள் தஞ்சம்...!
சிறுமி உயிரிழந்த விவகாரம் - இருவர் மீது வழக்குப்பதிவு ! முடிவுக்கு வந்த போராட்டம் !!
கே என் நேரு மீதான முறைகேடு வழக்கு ! நீதிமன்றம் சரமாரி கேள்வி !!
விளாத்திகுளம் சம்பவம் - எஸ் வி சேகர் சர்ச்சை பேச்சு !
ஓசி சிகரெட் - மறுத்த கடைக்காரரை அறிவாளால் வெட்டிய பயங்கரம் ! போதை கும்பல் அட்டகாசம் !!