| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

புதிய புறக்காவல் நிலையம்...! டி.ஐ.ஜி சாமிநாதன் திறப்பு..! மக்கள் வரவேற்பு...!

by Vignesh Perumal on | 2026-01-14 01:28 PM

Share:


புதிய புறக்காவல் நிலையம்...! டி.ஐ.ஜி சாமிநாதன் திறப்பு..! மக்கள் வரவேற்பு...!

திண்டுக்கல் மாவட்டம் பழனி - ஒட்டன்சத்திரம் பிரதான சாலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் விருப்பாச்சி மேடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய புறகாவல் நிலையத்தை திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி (DIG) சாமிநாதன் இன்று திறந்து வைத்தார்.

பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள விருப்பாச்சி மேடு பகுதி, போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த முக்கிய இடமாகும். இப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், நெடுஞ்சாலைகளில் நடைபெறும் விபத்துகளுக்கு விரைந்து முதலுதவி மற்றும் நடவடிக்கை எடுக்கவும், அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று இந்தப் புறகாவல் நிலையம் (Out-post Police Station) அமைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற விழாவில், திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி சாமிநாதன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய புறகாவல் நிலையத்தை முறைப்படி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் அங்குள்ள வசதிகளை அவர் ஆய்வு செய்தார். இந்த விழாவில் திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கியக் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) தனஞ்ஜெயன் பழனி டிஎஸ்பி (DSP) கார்த்திகேயன் ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி (DSP) கவிதா சத்திரப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், சத்திரப்பட்டி மற்றும் பழனி உட்கோட்டத்தைச் சேர்ந்த காவலர்கள் மற்றும் ஊர் முக்கியப் பிரமுகர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அதிகாரிகள், "இந்தப் புறகாவல் நிலையம் அமைக்கப்பட்டதன் மூலம் இப்பகுதியில் குற்றச் செயல்கள் குறையும். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான உதவிகளுக்கு இந்த நிலையத்தை அணுகலாம். நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களைக் கண்காணிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் 24 மணி நேரமும் காவலர்கள் பணியில் இருப்பார்கள்" என்று தெரிவித்தனர். விருப்பாச்சி மேடு பகுதியில் புதிய புறகாவல் நிலையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும், பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.


செய்தி - மோகன் கணேஷ் திண்டுக்கல் 

நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment