by admin on | 2026-01-13 05:17 PM
காவல் நிலையத்தில் பொதுமக்களுக்கு தண்ணீர்,இருக்கை வசதியை உறுதி செய்யவேண்டும்.. காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R. ஸ்டாலின் IPS அவர்கள் வலியுறுத்தல்
டிசம்பர் மாதத்தில் சிறப்பாக செயல்பட்ட வடசேரி காவல் நிலையத்திற்கு கேடயம்மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆயுதப்படையில் வைத்து இன்று நடைபெற்றது.சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்து நன்னடத்தைப் பிணை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் தொடர் குற்றங்கள் நடைபெறும் இடங்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.- குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதற்கு முக்கியத்துவம் - போதை பொருள் குட்கா சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்காணித்தல் போகோ வழக்குகளில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தல் காவல் நிலையம் வரும் பொது மக்களுக்கு இருக்கை மற்றும் தண்ணீர் வசதி உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்
டிசம்பர் மாதத்தில், விரைவான குற்றப் பத்திரிகை தாக்கல், குற்றவாளிகளை கைது செய்தல், சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் மீதான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருதல் என ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்ட காவல் நிலையமாக வடசேரி காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கேடயம் வழங்கினார். அதனை நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சிவசங்கரன் மற்றும் வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. வேலம்மாள் , உதவி ஆய்வாளர் திரு. குத்தாலிங்கம், ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.இந்த கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், மேலும் மருத்துவத்துறை, குழந்தைகள் நல அலுவலர், அரசு குற்ற வழக்கறிஞர்கள் உட்பட அனைத்துதுறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
தி. முத்துக்காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர். 9842337244.
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!