by admin on | 2026-01-13 04:00 PM
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (13.01.2026) மாவட்ட நிர்வாகம் சார்பில், தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவப் பொங்கல் விழா பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது.தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு பண்டிகை தைப்பொங்கல் விழாவாகும். அனைத்துத் தொழில்களுக்கும், அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடத்தப்பட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளான பானை உடைத்தல், சுருள்வாள் சுற்றுதல், குண்டு எறிதல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி, லக்கி கார்னர் போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் பானை உடைத்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பொங்கல் வைத்து, பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மேலும், பொங்கல் விழாவினை சிறப்பிக்கும் வகையில் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்றனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ராஜகுமார், பெரியகுளம் சார் ஆட்சியர் திரு.ரஜத் பீடன், இ.ஆ.ப., உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களும், பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
தி.முத்துக்காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர். 9842337244.
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!