by satheesh on | 2026-01-09 08:16 PM
கன்னியாகுமரி: தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் வள்ளியாற்றில், கொல்லன்விளை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ ஆற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், மார்த்தாண்டம் சிராயன்குழியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் இமானுவேல் படுகாயம் அடைந்தார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டனர். அதே வழியாக சென்ற குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, விபத்து செய்தி அறிந்ததும் உடனடியாக தனது காரிலேயே அவரை தக்கலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு அனுமதித்தார். 108 ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் துரிதமாக செயல்பட்ட ஆட்சியரின் மனிதாபிமான செயல் அங்கிருந்த மக்களிடையே பெரும் பாராட்டை பெற்றது.குமரி கலெக்டரின் மனிதாபிமானம் விபத்து நடந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, ஆட்சியரின் அவசர உதவி நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
தேர்தலில் கனிமொழி போட்டியா? - அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள் ! திமுக தலைமை போடும் கணக்கு என்ன.?
கொடைக்கானலில் 2-வது நாளாக தொடரும் அவலம்...! விலங்குகள் ஊருக்குள் தஞ்சம்...!
சிறுமி உயிரிழந்த விவகாரம் - இருவர் மீது வழக்குப்பதிவு ! முடிவுக்கு வந்த போராட்டம் !!
கே என் நேரு மீதான முறைகேடு வழக்கு ! நீதிமன்றம் சரமாரி கேள்வி !!
விளாத்திகுளம் சம்பவம் - எஸ் வி சேகர் சர்ச்சை பேச்சு !