by admin on | 2026-01-07 07:19 PM
தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. Dr. B. சினேஹாப்ரியா, இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பிளக்ஸ், பேனர் மற்றும் லித்தோ போஸ்ட் கடை உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் ஆகியோருடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.இக்கூட்டத்தில், பிளக்ஸ் மற்றும் பேனர் வைப்பதற்கான சட்ட விதிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், ஜாதி, மதம் மற்றும் அரசியல் ரீதியாகப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையிலான வாசகங்கள் மற்றும் படங்களை அச்சிடுவது சட்டப்படி குற்றமாகும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.அத்துடன், இனிவரும் காலங்களில் விதிமுறைகளை மீறி பிளக்ஸ், பேனர் மற்றும் லித்தோ போஸ்ட் அச்சிடக் கூடாது என கடுமையாக அறிவுறுத்தப்பட்டது.விதிமுறைகளை மீறுவோர்மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தி.முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர். 9842337244
தேர்தலில் கனிமொழி போட்டியா? - அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள் ! திமுக தலைமை போடும் கணக்கு என்ன.?
கொடைக்கானலில் 2-வது நாளாக தொடரும் அவலம்...! விலங்குகள் ஊருக்குள் தஞ்சம்...!
சிறுமி உயிரிழந்த விவகாரம் - இருவர் மீது வழக்குப்பதிவு ! முடிவுக்கு வந்த போராட்டம் !!
கே என் நேரு மீதான முறைகேடு வழக்கு ! நீதிமன்றம் சரமாரி கேள்வி !!
விளாத்திகுளம் சம்பவம் - எஸ் வி சேகர் சர்ச்சை பேச்சு !