by admin on | 2026-01-06 04:28 PM
தேனி மாவட்டம் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்கீழ் செயல்பட்டு வரும் சமூக நீதி கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும், மாணவர்களுக்கு நடத்தப்பட்ட “நல்லோசை – களமாடு 2026 ” எனும் பல்திறன் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் கேடயங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (06.01.2026) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்கீழ் செயல்பட்டு வரும் சமூக நீதி கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும், மாணவர்களுக்கு நடத்தப்பட்ட “நல்லோசை – களமாடு 2026 ” எனும் பல்திறன் விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற 7 கல்லூரிகளைச் சேர்ந்த 90 மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி, வாழ்த்துகளை தெரிவித்தார்.