| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

மேல்முறையீட்டு மனு தள்ளுபடி - கார்த்திகை தீபம் ஏற்ற தடையில்லை - உயர் மதுரை அமர்வு பரபரப்பு தீர்ப்பு ;

by satheesh on | 2026-01-06 12:56 PM

Share:


மேல்முறையீட்டு மனு தள்ளுபடி - கார்த்திகை தீபம் ஏற்ற தடையில்லை  -  உயர் மதுரை அமர்வு பரபரப்பு  தீர்ப்பு ;

மதுரை; திருப்பரங்குன்றம்  மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு எதிராக, தமிழக அரசு மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து தீபம் ஏற்றலாம் என்பது உறுதியாகி உள்ளது. தீபம் ஏற்றலாம்: நீதிமன்றம் திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பது நகைப்புக்குரியது. மாவட்ட நிர்வாகம் தேவையற்ற பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. அரசின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. ஒவ்வொரு கார்த்திகை தீபத்தின் போதும் தீபம் ஏற்றலாம்.  தூணில் தீபம் ஏற்றும்போது பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது . திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றும்போது பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது. தீபமேற்றும்போது யாரை அனுமதிக்கலாம் என காவல் துறை, தொல்லியல் துறை, தேவஸ்தானம் முடிவு செய்யலாம்.கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பது அர்த்தமற்றது. 

பொது அமைதிக்கு ஏற்பட்ட பிரச்னைக்கு அரசே காரணம்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் மேல்முறையீடு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இரு நீதிபதிகள் அமர்வு கருத்து தெரிவித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 
செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment