by satheesh on | 2026-01-05 07:21 PM
சென்னையில் நாளை முதல் காலி மதுபாட்டில்களைத் திரும்பப்பெறும் திட்டம் மீண்டும் அமலாகிறது; இதற்காக மது வாங்கும் போதே கூடுதலாக ரூ.10 கொடுக்க வேண்டும்.மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களைத் திரும்ப அதே மதுபான விற்பனைக் கடையில் ஒப்படைக்கும் போது ரூ.10/-ஐ திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் புதிய திட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், மதுபானம் வாங்குபவர்களை *‘வாடிக்கையாளர்கள்’* என குறிப்பிடப்பட்டுள்ள சொல் தேர்வு, விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசே நடத்தும் மதுபான விற்பனை தொடர்பான அறிவிப்பில், மதுபானம் வாங்குபவர்களை *‘வாடிக்கையாளர்கள்’* என குறிப்பிடப்பட்டிருப்பது, இந்த நடவடிக்கையை ஒரு சமூகப் பிரச்சினையாக அல்லாமல், நிர்வாக மற்றும் வணிக செயல்பாடாக மட்டுமே அரசு அணுகுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. சட்டம் மற்றும் நிர்வாக ரீதியாக, சில்லறை விற்பனை அமைப்புகளில் *‘வாடிக்கையாளர்’* என்ற சொல்லைப் பயன்படுத்துவது தொழில்நுட்ப ரீதியாக சரியானதாக இருக்கலாம் என்றாலும், *சமூக மற்றும் குடும்ப பாதிப்புகள் அதிகம் உள்ள மதுபானக் கொள்கையில்* பயன்படுத்தப்படும் மொழி, அரசின் முன்னுரிமைகள் எதுவென்பதை வெளிப்படுத்துகிறது என சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.
N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!