| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

சபரிமலையில் பல இடங்களிலும் தங்க திருட்டு - பரபரப்பு தகவல்:

by satheesh on | 2026-01-03 06:21 PM

Share:


சபரிமலையில் பல இடங்களிலும் தங்க திருட்டு  - பரபரப்பு தகவல்:

கேரளா; சபரிமலையில் தங்கத் திருட்டு தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில்,  பலரும் கைது செய்யப்பட்டு,  விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, பல மாநிலங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது . நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை  ஏற்படுத்தி இருக்கும் இந்தத் தங்கம் திருட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.  தங்கத் திருட்டு வழக்கு நடைபெறும் கொல்லம் நீதிமன்றத்தில் எஸ்.ஐ.டி. தாக்கல் செய்த அறிக்கையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலை மட்டுமின்றி மேலும் 7 தகடுகளில் இருந்து தங்கம் திருடப்பட்டது அம்பலம் ஆகி உள்ளது. துவார பாலகர் சிலை மட்டுமின்றி தங்க முலாம் பூசப்பட்ட கருவறை கதவில் இருந்து தங்கம் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தங்க முலாம் பூசப்பட்ட கதவு, சிலைகள் மட்டுமின்றி சன்னிதானத்தின் மேலும் பல இடங்களில் தங்கம் திருட்டு என்று எஸ்.ஐ.டி தெரிவித்துள்ளது.

செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment