| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

மெரினாவில் கடைகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு :

by satheesh on | 2026-01-03 11:40 AM

Share:


மெரினாவில் கடைகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவு :

சென்னை ; ரசிக்கத்தான் கடற்கரைகளே தவிர, அதனை ஷாப்பிங் மால்களாக மாற்ற முடியாது. மெரினா கடற்கரையில் உணவு, பொம்மை, பேன்சி கடைகளை தவிர வேறு இருக்கக்கூடாது. சென்னை கடற்கரை உழைப்பாளர் சிலை பின்புறம் உள்ள நிரந்தக் கடைகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. நீலக்கொடி சான்று பெறும் பகுதிகளில் எந்த கடையையும் அமைக்கக் கூடாது. தலைவர்களின் நினைவிடங்கள் அமைந்துள்ள பகுதியின் பின்புறமுள்ள பகுதியையும் நீலக்கொடி சான்று பெற்ற பகுதியாக அறிவிக்க நடவடிக்கை வேண்டும். உலகில் வேறு எந்த கடற்கரையிலும் இவ்வளவு கடைகள் இல்லை; சாலையில் இருந்து கடலின் அழகை ரசிக்க முடியாத அளவுக்கு கடைகள். மக்கள் ரசிக்கத்தான் கடற்கரைகளே தவிர, அதனை ஷாப்பிங் மால்களாக மாற்ற முடியாது. சென்னை கடற்கரை உழைப்பாளர் சிலை பின்புறம் உள்ள நிரந்தக் கடைகளை அகற்ற வேண்டும். சென்னை மெரினா கடற்கரையில் கடைகளை முறைப்படுத்துவது குறித்த வழக்குகளில் கடைகளின் எண்ணிக்கையை குறைத்து புதிய திட்டத்தை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment