by admin on | 2025-12-28 01:06 PM
49 அடி உயர மாகாளி அம்மனுக்கு மார்கழிமாத பூச்சொரிதல் விழா . 108 பால்குடங்கள் மற்றும் மோட்டார் மூலம் பால் அபிஷேகம் . ஆண்டிபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆண் பெண் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்தனர்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தேனி சாலையில் அமைந்துள்ள 49 அடி உயர மாகாளி அம்மனுக்கு மார்கழி மாத பூச்சொறிதல் விழா நடைபெற்றதுமுன்னதாக யாகசாலையில் அக்னிவளர்த்து வேத மந்திரங்கள் ஓத வேள்விபூசை நடைபெற்றது
இதையடுத்து மாகாளி அம்மனுக்கு 108 பால்குடம் மூலம் பால் அபிஷேகம் மோட்டார் மூலம் பைப்பில் மாகாளி அம்மனுக்கு பால் பீய்ச்சப்பட்டு அபிஷேகம் நடைபெற்றதுஅப்போது காப்புகட்டி விரதமிருந்த பெண் பக்தர்கள் குலவையிட்டும் கும்மிப்பாடல்கள் பாடியும் மாகாளி அம்மனை வழிபட்டனர்இதையடுத்து 23 அடி உயர குதிரை வாகனத்தில் அமர்ந்துள்ள அய்யனாருக்கு பால் அபிஷேகமும் பூச்சொரிதல் விழாவும் நடைபெற்றது
இதையடுத்து கூடியிருந்த பக்தர்கள் மீது அபிஷேகம் செய்யப்பட்ட பால் பிரசாதமாக தெளிக்கப்பட்டதுவிழாவில் ஆண்டிபட்டி மட்டும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
தேர்தலில் கனிமொழி போட்டியா? - அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள் ! திமுக தலைமை போடும் கணக்கு என்ன.?
கொடைக்கானலில் 2-வது நாளாக தொடரும் அவலம்...! விலங்குகள் ஊருக்குள் தஞ்சம்...!
சிறுமி உயிரிழந்த விவகாரம் - இருவர் மீது வழக்குப்பதிவு ! முடிவுக்கு வந்த போராட்டம் !!
கே என் நேரு மீதான முறைகேடு வழக்கு ! நீதிமன்றம் சரமாரி கேள்வி !!
விளாத்திகுளம் சம்பவம் - எஸ் வி சேகர் சர்ச்சை பேச்சு !