| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

திண்டுக்கல்லில் பரபரப்பு..! பெண் மர்ம மரணம்...! காவல் நிலையம் முற்றுகை..!

by Vignesh Perumal on | 2025-12-27 03:16 PM

Share:


திண்டுக்கல்லில் பரபரப்பு..! பெண் மர்ம மரணம்...! காவல் நிலையம் முற்றுகை..!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அது வரதட்சணை கொடுமையால் நிகழ்ந்த கொலை என்று கூறி அவரது உறவினர்கள் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கொடைரோடு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், இன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டுத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும், அதன் காரணமாகவே அவர் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் நூற்றுக்கணக்கான உறவினர்கள் இன்று அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். காவல் நிலைய வாசலில் அமர்ந்து அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பந்தப்பட்ட கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.

வழக்கைப் படுகொலை வழக்காகப் பதிவு செய்து நேர்மையான விசாரணை நடத்த வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக இந்தப் போராட்டம் நீடித்தது.

காவல் நிலையத்தின் முன் திரளான மக்கள் குவிந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் மிகுந்த பதற்றமான சூழல் நிலவியது. "எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம்" என்றும், "குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம்" என்றும் உறவினர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர்.

போராட்டம் தீவிரமடைந்ததைக் கண்டு, காவல் துறையின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், "பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கை மற்றும் முறையான விசாரணைக்குப் பிறகு, தவறு செய்தவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதி அளித்தனர்.

உயர் அதிகாரிகளின் உறுதிமொழியை ஏற்று, சுமார் 4 மணி நேரத்திற்குப் பிறகு உறவினர்கள் தற்காலிகமாகப் போராட்டத்தைக் கைவிட்டனர். இருப்பினும், அப்பகுதியில் பாதுகாப்பு கருதி கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வரதட்சணை கொடுமை காரணமாக ஒரு இளம் பெண் உயிரிழந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம், கொடைரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.










செய்தி - மோகன் கணேஷ் திண்டுக்கல்

நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment