| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

தங்கம் விலை தொடர் உயர்வு...! நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி..!

by Vignesh Perumal on | 2025-12-27 11:07 AM

Share:


தங்கம் விலை தொடர் உயர்வு...! நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்து, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வரலாற்றில் முதல்முறையாக ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது சாமானிய மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையை விட ரூ.110 உயர்ந்து, இன்று ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு சவரன் தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, இன்று ரூ.1,04,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உலகளாவிய பொருளாதாரச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் தங்கத்தின் விலையில் எதிரொலிக்கின்றன.

புத்தாண்டை ஒட்டியும், வரவிருக்கும் திருமண முகூர்த்த நாட்களை முன்னிட்டும் தங்கத்திற்கான தேவை அதிகரித்துள்ளதே இந்த திடீர் உயர்விற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று ஏறுமுகமாகவே உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.110-க்கும் மேலாக விற்பனை செய்யப்படுகிறது.

இன்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த விலையானது கடைக்குக் கடை மற்றும் ஊருக்கு ஊர் சற்று மாறுபட வாய்ப்புள்ளது. மேலும், நகைகள் வாங்கும்போது இந்த விலையுடன் 3% ஜிஎஸ்டி (GST) மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் நிர்ணயிக்கும் செய்கூலி, சேதாரம் ஆகியவை கூடுதலாகச் சேர்க்கப்படும். இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் வாங்கும்போது அதன் இறுதி விலை சுமார் ரூ.1,13,000 முதல் ரூ.1,15,000 வரை இருக்க வாய்ப்புள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருப்பதால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும், சாமானிய குடும்பத்தினர் தங்களது வீட்டு விசேஷங்களுக்காக நகை வாங்கத் திணறி வருகின்றனர்.













நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment