by Vignesh Perumal on | 2025-12-21 01:56 PM
திண்டுக்கல் அருகே சீலப்பாடி பைபாஸ் சாலையில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில், சாலையைக் கடக்க முயன்ற வாலிபர் ஒருவர் லாரி மோதி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சீலப்பாடி பைபாஸ் பகுதியில் இன்று இந்த விபத்து நேரிட்டது. அப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பணியாற்றி வந்த வாலிபர், தனது வேலை நிமித்தமாக சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி ஒன்று, எதிர்பாராத விதமாக வாலிபர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லாரியின் சக்கரம் ஏறியதில் அந்த வாலிபரின் தலை நசுங்கி, அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சிறப்பு சார்பு ஆய்வாளர் வனராஜ் மற்றும் காவலர்கள் விபத்து நடந்த பகுதியைச் சீரமைத்து, உயிரிழந்த வாலிபரின் உடலைக் கைப்பற்றினர்.
பின்னர், வாலிபரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக (Post-mortem) திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த நபர் விபத்து நடந்த இடத்திற்கு அருகாமையில் உள்ள ஒரு ஹோட்டலில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவரது முழுமையான முகவரி மற்றும் பெயர் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரிடம் தாலுகா போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!