by Vignesh Perumal on | 2025-12-18 02:29 PM
தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், புத்தாண்டு விடுமுறை முடிந்து மாணவர்கள் கல்லூரிக்குத் திரும்பியவுடன் மடிக்கணினிகள் வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த மடிக்கணினிகள் சாதாரணமானவை அல்ல, அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வசதி கொண்டவை என்பது கூடுதல் சிறப்பு.
வரும் பிப்ரவரி மாதத்திற்குள் முதற்கட்டமாக 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன.
உலகத்தரம் வாய்ந்த 'Perplexity Pro AI' வசதி, மாணவர்களுக்கு 6 மாத காலத்திற்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தங்கள் பாடத்திட்டம் மற்றும் ஆராய்ச்சிகளுக்குச் செயற்கை நுண்ணறிவின் உதவியைப் பெற முடியும்.
இந்த மடிக்கணினிகள் அதிவேக புராசஸர் (Processor) மற்றும் நீண்ட நேரம் உழைக்கும் பேட்டரித் திறன் கொண்டவை. இதற்காக எல்காட் (ELCOT) நிறுவனம் மூலம் முன்னணி நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய விமர்சனங்களுக்குப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது: "கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் கிடைப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். இந்த மடிக்கணினிகள் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, AI தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. டெல்லி எஜமானர்கள் நினைத்தாலும் இந்தத் திட்டத்தைத் தடுக்க முடியாது," என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்தத் திட்டத்தை இன்று (டிசம்பர் 19, 2025) சென்னை வர்த்தக மையத்தில் தொடங்கி வைக்கிறார். புத்தாண்டு விடுமுறைக்குப் பின் ஜனவரி முதல் அனைத்துக் கல்லூரிகளிலும் விநியோகம் தொடங்கும்.
2026 பிப்ரவரி இறுதிக்குள் 10 லட்சம் மாணவர்களுக்கும் லேப்டாப் சென்றடைவதை உறுதி செய்யத் துணை முதலமைச்சர் தலைமையிலான குழு திட்டமிட்டுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!