by satheesh on | 2025-12-18 01:41 PM
கன்னியாகுமரி ; களியல் அருகே கட்டச்சல் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல் குவாரியை முன்னாள் மாவட்ட ஆட்சியர் நாகராஜன் நடவடிக்கையால் மூடப்பட்ட நிலையில் செயல்படாமல் இருந்த கல்குவாரி,குமரியை சேர்ந்த குவாரி உரிமையாளர் ஒருவர் மூலம் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது. பாறைகள் உடைக்க அனுமதி இல்லாத நிலையில் சட்ட விரோதமாக பாறைகள் உடைப்பதாக புகார் எழுந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின்,கல் குவாரியில் அதிரடியாக நடத்திய சோதனையில் குவாரி மேற்பார்வையாளர் ஸ்டாலின் என்பவரை கைது செய்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத கடையாலுமூடு காவல் நிலையத்தை சேர்ந்த இரண்டு காவலர்கள் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்தும் எஸ்பி உத்தரவு. மேலும், கேரளாவிற்கு சட்ட விரோதமாக கடத்தப்படும் லாரிகளை ஆய்வுக்கு உட்படுத்தி, லாரிகளை பறிமுதல் செய்தும் அபதாரம் விதித்தும், தீவிர சோதனையை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பண மோசடி - பெண் எஸ்.ஐ சஸ்பெண்ட் ! எஸ்பி அதிரடி !!
தேர்தலில் கனிமொழி போட்டியா? - அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள் ! திமுக தலைமை போடும் கணக்கு என்ன.?
கொடைக்கானலில் 2-வது நாளாக தொடரும் அவலம்...! விலங்குகள் ஊருக்குள் தஞ்சம்...!
சிறுமி உயிரிழந்த விவகாரம் - இருவர் மீது வழக்குப்பதிவு ! முடிவுக்கு வந்த போராட்டம் !!
கே என் நேரு மீதான முறைகேடு வழக்கு ! நீதிமன்றம் சரமாரி கேள்வி !!