| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு...! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...!

by Vignesh Perumal on | 2025-12-17 11:07 AM

Share:


மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு...! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...!

தென் தமிழகத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 17, 2025) மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழகத்தின் கீழ்க்கண்ட மாவட்டங்களில் மிதமான மழைக்குச் சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, கன்னியாகுமரி,ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் காலை முதல் மதியம் 1 மணி வரை அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மழைக்கான வாய்ப்பு இருப்பதால், இந்தக் காலகட்டத்தில் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விவசாயிகள் மற்றும் மீனவர்கள் வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.













நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment