by Vignesh Perumal on | 2025-12-15 11:16 AM
தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாயைத் தொட்டு வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது. பொருளாதாரச் சூழல் மற்றும் சர்வதேச சந்தை நிலவரங்களின் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
ஒரு சவரன் (8 கிராம்) ரூ.98,960 க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.720 அதிகரித்துள்ளது. மேலும், ஒரு கிராம் ரூ.12,460 அதிகரித்துள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.720 என்ற குறிப்பிடத்தக்க உயர்வைச் சந்தித்துள்ளது. இந்த விலை ஏற்றத்தால், ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.99,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமின் விலை ரூ.90 உயர்ந்து, ரூ.12,460-க்கு விற்கப்படுகிறது.
இந்த விலை உயர்வு தங்கம் வாங்குவோர் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது. தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வம் அதிகரித்திருப்பது மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்கள் ஆகியவை இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!