| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Kanniyakumari

சிறப்பாகச் செயல்பட்ட காவல் நிலையத்திற்கு கேடயம்..!! மாவட்ட எஸ்பி பாராட்டு...!!

by Vignesh Perumal on | 2025-12-12 12:14 PM

Share:


சிறப்பாகச் செயல்பட்ட காவல் நிலையத்திற்கு கேடயம்..!! மாவட்ட எஸ்பி பாராட்டு...!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் குற்றவாளிகளைக் கைது செய்தல், விரைவான குற்றப்பத்திரிகை தாக்கல் உள்ளிட்டவற்றில் ஒட்டுமொத்தமாகச் சிறப்பாகச் செயல்பட்டதற்காகத் திருவட்டார் காவல் நிலையத்திற்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின், ஐ.பி.எஸ்., அவர்கள் கேடயம் வழங்கிப் பாராட்டினார். முன்னதாக, காவல் துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மற்றும் குற்றக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாதாந்திர ஆய்வுகள் நடைபெற்றன.

மாவட்டக் காவல் துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களும் நல்ல முறையில் இயங்குகிறதா என்பது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். மாதாந்திர குற்றக் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆயுதப்படையில் வைத்து நடைபெற்றது.

கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அதிகாரிகளுக்கு வழங்கிய அறிவுரைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது, காவல்துறையினர் தொழில்நுட்ப அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து குற்றங்கள் நடைபெறும் இடங்களைப் மேப்பிங் செய்து கண்டறிந்து, அங்குப் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளைக் கண்டறிந்து, விரைவில் கைது செய்ய வேண்டும்.

நவம்பர் மாதத்திற்கான காவல் நிலையங்களின் செயல்பாடு மதிப்பீடு செய்யப்பட்டது. இதில், பின்வரும் அம்சங்களில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக திருவட்டார் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாகத் தேர்வு செய்யப்பட்டது.

விரைவான குற்றப் பத்திரிகை தாக்கல், குற்றவாளிகளைக் கைது செய்தல், சரித்திரப் பதிவேடு, குற்றவாளிகள் மீதான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருதல்.


ஒட்டுமொத்தமாகச் சிறப்பாகச் செயல்பட்ட திருவட்டார் காவல் நிலையத்திற்குக் கேடயத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் வழங்கினார். அந்தக் கேடயத்தை தக்கலை உட்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. பார்த்திபன் மற்றும் திருவட்டார் காவல் நிலைய ஆய்வாளர் திரு. மதன் ராம்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், அனைத்து உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்துக் காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், மேலும் மருத்துவத்துறை, குழந்தைகள் நல அலுவலர், அரசு குற்ற வழக்கறிஞர்கள் உட்பட அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.










நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment