by Vignesh Perumal on | 2025-12-05 04:12 PM
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் நிலவிய சர்ச்சைகள் குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு நீதிபதிகள் இன்று (டிசம்பர் 5, 2025) கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ஆர். ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்துப் பொதுவெளியிலும், சமூக வலைதளங்களிலும் பரப்பப்படும் கருத்துக்கள் குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.
மேலும், "திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சமூக வலைதளங்களில் தேவையற்ற கருத்துக்களைப் பகிரக் கூடாது. மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தின் மாண்பைக் கடைபிடிக்கும் வகையில் பொதுவெளியில் பேச வேண்டும். உத்தரவுகள் பிறப்பிக்கக் கோரி நீதிமன்றத்தை அவசரப்படுத்த வேண்டாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
முன்னதாக, தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீபம் ஏற்ற உத்தரவிட்டதும், அதற்கு எதிராகத் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ததும், சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் செல்ல முயன்றபோது அனுமதி மறுக்கப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் இரு சமூகப் பிரிவினர் இடையே பதற்றத்தை உருவாக்கியது.
இந்தச் சூழலில், நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் பின்பற்றுவதுடன், நீதிமன்றத்தின் மாண்பைக் குறைக்கும் வகையிலான எந்தவொரு கருத்தையும் பொதுவெளியில் பேசுவதையோ அல்லது சமூக வலைதளங்களில் பகிர்வதையோ மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் தவிர்க்க வேண்டும் என்று நீதிபதிகள் திட்டவட்டமாக எச்சரித்துள்ளனர்.
ஆசிரியர்கள் குழு.....
SC/ST மக்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து பத்திரிக்கையாளர் கார்த்திக் சங்கர் விளக்கம்....!!!!"
பறவை காய்ச்சல் எதிரொலி - காகங்கள் இறப்பு -அரசு எச்சரிக்கை - பொதுமக்களே உஷார் !
கொரியன் லவ் கேம் - 3 சகோதரிகள் தற்கொலை - அதிர்ச்சி தகவல் - பெற்றோர்களே உஷார் !!
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு