by admin on | 2025-12-03 06:27 PM
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் தமிழக
வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 360 பயனாளிகளுக்கு 30 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும்,விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு வெடி விபத்தில் பெற்றோர்களை இழந்த 32 குழந்தைகளுக்கு மாதாந்திர கல்வி உதவி தொகைகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் கே எஸ் ராஜேந்திரன் விருதுநகர்.