| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

திண்டுக்கல்லில் பத்திரிக்கையாளர் தாக்குதல் எதிரொலி...! வேடசந்தூரில் ஆர்ப்பாட்டம்..!

by Vignesh Perumal on | 2025-12-02 03:59 PM

Share:


திண்டுக்கல்லில் பத்திரிக்கையாளர் தாக்குதல் எதிரொலி...! வேடசந்தூரில் ஆர்ப்பாட்டம்..!

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது அறநிலையத் துறை ஆதரவு நபர்கள் மற்றும் தனியார் பாதுகாவலர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்து, வேடசந்தூர் காவல் நிலையம் முன்பாகவும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ரெட்டியார்சத்திரம் அருகே கனகசபை என்பவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் குடியிருக்கும் இடத்தை ஆக்கிரமிப்பு எனக் கூறி, பழனி அறங்காவல் துறை இணை ஆணையர் (JC) தலைமையில் அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற வந்துள்ளனர்.

அப்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கும் அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைப் பதிவு செய்யச் சென்ற பத்திரிகையாளர்களை, அறநிலையத் துறை ஊழியர்களுடன் வந்த தனியார் பாதுகாவலர்கள் (செக்யூரிட்டிகள்) கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இந்தக் கொலைவெறித் தாக்குதலில் இரண்டு பத்திரிகையாளர்கள் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் நடந்த பிறகு, ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ஒரு தலைப்பட்சமாகச் செயல்பட்டதாகக் கூறி, பத்திரிகையாளர்கள் அவருக்குக் கண்டனம் தெரிவித்தனர். மேலும், தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, அவர்கள் ரெட்டியார்சத்திரம் காவல் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாக்குதல் நடத்திய குண்டர்களை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி, திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, வேடசந்தூர் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேடசந்தூர் காவல் நிலையம் முன்பு இன்று (டிசம்பர் 2, 2025) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.தாக்குதல் நடத்திய நபர்களைக் கைது செய்து, அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வேடசந்தூர் பத்திரிகையாளர்கள் சங்கத்தினர் முழக்கங்களை எழுப்பினர்.பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளை அச்சுறுத்துவதாகும் என்று தமிழகப் பத்திரிகையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், தாக்குதல் நடத்தியவர்கள் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.


செய்தியாளர் மோகன கணேஷ்.

நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment